ஐஷர் மோட்டார்ஸ் 3வது காலாண்டு லாபம் ரூ.1,420.61 கோடியாக அதிகரிப்பு!
புதுதில்லி: மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வரும் ஐஷர் மோட்டார்ஸ் தனது 3வது காலாண்டு முடிவை இன்று வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 21.37% உயர்ந்து ரூ.1,420.61 கோடியாக இருப்பதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,170.5 கோடியாக இருந்தது. அதன் இருசக்கர வாகனப் பிரிவான ராயல் என்ஃபீல்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.958 கோடி முதலீட்டை அதன் வாரியம் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தது.
நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.6,114.04 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.4,973.12 கோடியாக இருந்தது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.4,785.69 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம், இதே காலத்தில் இது ரூ.3,964.59 கோடியாக இருந்தது.
காலாண்டு விற்பனையாக, ராயல் என்ஃபீல்ட் 3,25,773 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், விற்பனையான 2,69,039 இருசக்கர வாகனங்களை விட இது 21 சதவீதம் அதிகம்.
Eicher Motors Ltd on Tuesday reported a 21.37 per cent rise in consolidated profit after tax to Rs 1,420.61 crore in the third quarter ended December 31, 2025, driven by robust sales.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

