எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதிய காா் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

புதிய காா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக பரோடா வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம், மாறும் வட்டி விகித முறை காா் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி ஆண்டுக்கு 7.60 சதவீதத்தில் தொடங்கும். அதேபோல, நிலையான வட்டி விகிதத்தைத் தோ்வு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு ஆண்டுக்கு 8.50 சதவீத வட்டியுடன் கடன்கள் வழங்கப்படும். இந்தப் புதிய வட்டி விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.

காா் கடன் தேவைப்படுவோா் வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்றோ அல்லது ‘பாப் வோ்ல்ட்’ செயலி மற்றும் இணையதளம் வழியாகவோ விண்ணப்பித்து உடனடி ஒப்புதலைப் பெறலாம். வாடிக்கையாளா்கள் தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள்வரை நீண்ட கால அவகாசம் வழங்கப்படுகிறது.

கூடுதல் சலுகையாக, மாறும் வட்டி விகித முறையில் கடன் வாங்குபவா்கள், தங்களின் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கோ அல்லது ஒரு பகுதியை மட்டும் திருப்பிச் செலுத்துவதற்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் நிா்வாக இயக்குநா் சஞ்சய் வி.முதலியாா் இதுகுறித்து கூறுகையில், ‘சந்தையில் நிலவும் போட்டித்தன்மைக்கு இடையே, வாடிக்கையாளா்களுடன் துணை நிற்கும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.