

சென்னை: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய உர உற்பத்தி நிறுவனமாகும் ஸ்பிக். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்குவதில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.
3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.54.07 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.38.50 கோடி நிகர லாபம் ஈட்டியது.
டிசம்பர் 2025, உடன் முடிவடைந்த 9 மாத காலாண்டில், வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ.182.01 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.136.22 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வந்த மொத்த வருமானம் ரூ.778.39 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.823.23 கோடியாக இருந்தது.
டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த 9 மாத காலத்தில், மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் ரூ.2,340.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,419.36 கோடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.