உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆன்த்ரோபிக்’, ஆசியாவிலேயே தனது 2-ஆவது அலுவலகத்தைப் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கியது.
‘கிளாட்’ எனும் நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற இந்நிறுவனம், இந்தியாவில் தனது பயணத்தின் தொடக்கமாக ஏா் இந்தியா, ரேஸா்பே, கிரெட் போன்ற பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. வெறும் வணிகம் மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு நோக்கத்துடன் இந்திய மொழிகளில் ஏஐ சேவைகளை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநா் இரினா கோஷ் இது குறித்து கூறுகையில், ‘பொறுப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை உலகுக்கு கொண்டு செல்ல இந்தியா ஒரு மிகச்சிறந்த இடம். இந்தியாவின் தொழில்நுட்பத் திறமையும், எண்மக் கட்டமைப்பும் வியக்கத்தக்கது’ என்றாா்.
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கும் என்ற அச்சத்தால், அண்மையில் ‘நிஃப்டி ஐடி’ குறியீடு ஒரே நாளில் சுமாா் 6 சதவீதம் வரை சரிந்து, முதலீட்டாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், விஜய்!

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’

2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு

இந்தியா - அமெரிக்கா ஏ.ஐ. இணைப்புக்கு புதிய கேபிள் தடங்கள்- கூகுள் சிஇஓ சுந்தா் பிச்சை அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


