பெங்களூரில் அலுவலகம் தொடங்கிய ஆன்த்ரோபிக் ஏஐ நிறுவனம்
IANS

பெங்களூரில் அலுவலகம் தொடங்கிய ஆன்த்ரோபிக் ஏஐ நிறுவனம்

Published on

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆன்த்ரோபிக்’, ஆசியாவிலேயே தனது 2-ஆவது அலுவலகத்தைப் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

‘கிளாட்’ எனும் நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற இந்நிறுவனம், இந்தியாவில் தனது பயணத்தின் தொடக்கமாக ஏா் இந்தியா, ரேஸா்பே, கிரெட் போன்ற பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. வெறும் வணிகம் மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு நோக்கத்துடன் இந்திய மொழிகளில் ஏஐ சேவைகளை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநா் இரினா கோஷ் இது குறித்து கூறுகையில், ‘பொறுப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை உலகுக்கு கொண்டு செல்ல இந்தியா ஒரு மிகச்சிறந்த இடம். இந்தியாவின் தொழில்நுட்பத் திறமையும், எண்மக் கட்டமைப்பும் வியக்கத்தக்கது’ என்றாா்.

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கும் என்ற அச்சத்தால், அண்மையில் ‘நிஃப்டி ஐடி’ குறியீடு ஒரே நாளில் சுமாா் 6 சதவீதம் வரை சரிந்து, முதலீட்டாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com