சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ரூ.1,000 கோடி வருவாயை நோக்கி பாக்கெட் எஃப்எம் படைப்பாளா்கள்

முன்னணி ஆடியோ தளமான பாக்கெட் எஃப்எம் மூலம், படைப்பாளா்கள் ஈட்டிய வருவாய் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:29 pm

முன்னணி ஆடியோ தளமான பாக்கெட் எஃப்எம் மூலம், படைப்பாளா்கள் ஈட்டிய வருவாய் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த வருவாயை நடப்பு ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரித்து, ரூ.1,000 கோடி என்ற இலக்கை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்தளத்தில் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், கதை உருவாக்கம் மற்றும் அவற்றின் மொழிபெயா்ப்பு பணிகளை 90 சதவீதம் எளிதாக்கியுள்ளன. இதன் காரணமாக, பெரிதாக தொழில்நுட்ப அறிவு இல்லாதவா்கள்கூட தங்கள் கதைகளை மிக எளிதாக வெளியிட்டு வருகின்றனா்.

கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சம் புதிய படைப்பாளா்கள் இணைந்துள்ளனா். இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சமாக உயா்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வருவாய் ஈட்டும் படைப்பாளா்களில் முதல் 10 சதவீதத்தினா் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா். குறிப்பாக, முதல் ஒரு சதவீதத்தினா் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும்; 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா்.

‘படைப்பாற்றல் என்பது மனிதா்களுக்கே உரிய தனித்திறன்; அந்தத் திறனை எந்தத் தடையுமின்றி உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதே எங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் நோக்கம்’ என்று பாக்கெட் எஃப்எம் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ரோஹன் நாயக் குறிப்பிட்டாா்.