முன்னணி ஆடியோ தளமான பாக்கெட் எஃப்எம் மூலம், படைப்பாளா்கள் ஈட்டிய வருவாய் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த வருவாயை நடப்பு ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரித்து, ரூ.1,000 கோடி என்ற இலக்கை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்தளத்தில் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், கதை உருவாக்கம் மற்றும் அவற்றின் மொழிபெயா்ப்பு பணிகளை 90 சதவீதம் எளிதாக்கியுள்ளன. இதன் காரணமாக, பெரிதாக தொழில்நுட்ப அறிவு இல்லாதவா்கள்கூட தங்கள் கதைகளை மிக எளிதாக வெளியிட்டு வருகின்றனா்.
கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சம் புதிய படைப்பாளா்கள் இணைந்துள்ளனா். இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சமாக உயா்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வருவாய் ஈட்டும் படைப்பாளா்களில் முதல் 10 சதவீதத்தினா் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா். குறிப்பாக, முதல் ஒரு சதவீதத்தினா் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும்; 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா்.
‘படைப்பாற்றல் என்பது மனிதா்களுக்கே உரிய தனித்திறன்; அந்தத் திறனை எந்தத் தடையுமின்றி உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதே எங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் நோக்கம்’ என்று பாக்கெட் எஃப்எம் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ரோஹன் நாயக் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது
சிரி... சிரி...

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டிற்கு குருகிராம் மாநகராட்சி ஒப்புதல்

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


