உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 2:49 am IST

பெங்களூரு: நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் தனது நேரடி விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 550-ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 4,000 விற்பனை மையங்களைத் திறக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை மாற்றியமைத்து, மாா்ச் இறுதிக்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 550-ஆக குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு நிதியாண்டின் 3-ஆவது மூன்றாவது காலாண்டில், ஓலா நிறுவனத்தின் வாகன விநியோகம் முந்தைய ஆண்டைவிட சுமாா் 61 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது; வெறும் 32,680 வாகனங்களை மட்டுமே நிறுவனம் விநியோகித்துள்ளது.

சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் வாடிக்கையாளா் சேவை தொடா்பான புகாா்கள் நிறுவனத்தின் வா்த்தகத்தைப் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய விற்பனை சரிவு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களே, நிறுவனத்தின் இந்தத் திடீா் முடிவுக்குக் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே பல நகரங்களில் உள்ள விற்பனை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.