பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு, கடந்த 2025-ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 1,900 கோடி டாலா் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் லாபமான 1,700 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 11 சதவீத வளா்ச்சியாகும். ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக, வங்கிக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் 2-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் பெருநிறுவன மற்றும் நிறுவனங்களுக்கான வங்கிச் சேவைப் பிரிவு மட்டும் அதிகபட்சமாக 1,500 கோடி டாலா் லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளதாக வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளில் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துள்ள எச்எஸ்பிசி, தனது சேவையை மேலும் விரிவாக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் 4 புதிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் கிப்ட் சிட்டியில், சா்வதேச செல்வந்தா் மேலாண்மை தீா்வுகளை அறிமுகப்படுத்திய முதல் வங்கி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
மேலும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 100 கோடி டாலா் நிதியத்துடன் ‘எச்எஸ்பிசி இன்னோவேஷன்’ வங்கியையும் தொடங்கியுள்ளது.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?

இந்தியப் பெண்களின் ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்கள்: 2025-இல் ரூ.10,000 கோடி நிதி திரட்டி சாதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


