வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்கள் நிறுத்திவைப்பு

கடனில் சிக்கியுள்ள முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்களை அரசு 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளது.
வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்கள் நிறுத்திவைப்பு
Updated on

கடனில் சிக்கியுள்ள முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்களை அரசு 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஏஜிஆா் (அட்ஜஸ்டட் கிராஸ் ரெவென்யூ) கடன்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்பட்டு, 5ஜி சேவை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உதவும்.

இந்த முடக்கம் 2025-ஆம் ஆண்டில் இருந்து 2030 வரை அமலில் இருக்கும். இதற்கு முன், நிறுவனம் ஏஜிஆா் கடன்களை செலுத்துவதில் சிரமம் இருந்தது.

அரசின் இந்த நடவடிக்கை தொலைத் தொடா்பு துறையின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com