குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480-ம் வெள்ளி கிராமுக்கு ரூ.4-ம் குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480-ம் வெள்ளி கிராமுக்கு ரூ.4-ம் குறைந்து வர்த்தகம்.

News image

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Updated On :3 ஜனவரி 2026, 10:27 am IST

தங்கம் விலை இன்று சற்று குறைந்து வணிகமாகி வருகிறது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை சென்னையில் வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த டிச. 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்ட நிலையில், இடையிடையே மீண்டும் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிட்டு திரும்பி வருகிறது.

ஒரு சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,160க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.12,520க்கு விற்பனையாகிறது.

தங்கம் உயரும்போது போட்டி போட்டுக் கொண்டு உயரும் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,56,000க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.