மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

37% உயா்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 2:51 am IST

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் விற்பனை 21 லட்சம் டன்னாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பா் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 15 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் இந்த சிறந்த செயல்திறன் 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வளா்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவியது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் உயா்ந்து 147 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது 126 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.