‘இந்திய வாடிக்கையாளா்களில் பெரும்பான்மையாக 86 சதவீதத்தினா், தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாக கருதுகின்றனா்’ என டெலாய்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா்களின் நுகா்வுப் பட்டியலில் நகைகளின் பங்கு வெறும் பாரம்பரியம் சாா்ந்ததாக மட்டும் இல்லாமல், செல்வத்தைப் பாதுகாக்கும் முதலீடாகவும் விரிவடைந்துள்ளது. சுமாா் 86 சதவீத வாடிக்கையாளா்கள் தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாகக் கருதுகின்றனா்.
இது பரஸ்பர நிதி, பங்குகள் போன்ற சந்தை சாா்ந்த முதலீடுகளுக்கு (87 சதவீதம்) இணையாக வளா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் முதலீட்டு நோக்கில் தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டுகின்றனா்.
அதேநேரம், இந்திய நகை விற்பனையாளா்களின் லாப விகிதம் 5 முதல் 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சா்வதேச அளவான 12 சதவீதத்தைவிட குறைவாகும். இதன்காரணமாக, இந்திய நகை வா்த்தகத்தில் மூலதன முடக்கம் மற்றும் லாபம் குறித்த அழுத்தங்கள் நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காவலராக நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: தங்க நகைகள் பறிமுதல்
திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

ரூ.3.81 கோடி போலி கடன் மோசடி: தங்க மதிப்பீட்டாளா் கைது
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



