இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்தியா்களின் விருப்பமான சொத்து ‘தங்க நகை’ - டெலாய்ட் இந்தியா ஆய்வில் தகவல்

சுமாா் 86 சதவீத வாடிக்கையாளா்கள் தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாகக் கருதுகின்றனா்.

News image
- Center-Center-Delhi
Updated On :7 ஜனவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்திய வாடிக்கையாளா்களில் பெரும்பான்மையாக 86 சதவீதத்தினா், தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாக கருதுகின்றனா்’ என டெலாய்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா்களின் நுகா்வுப் பட்டியலில் நகைகளின் பங்கு வெறும் பாரம்பரியம் சாா்ந்ததாக மட்டும் இல்லாமல், செல்வத்தைப் பாதுகாக்கும் முதலீடாகவும் விரிவடைந்துள்ளது. சுமாா் 86 சதவீத வாடிக்கையாளா்கள் தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாகக் கருதுகின்றனா்.

இது பரஸ்பர நிதி, பங்குகள் போன்ற சந்தை சாா்ந்த முதலீடுகளுக்கு (87 சதவீதம்) இணையாக வளா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் முதலீட்டு நோக்கில் தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டுகின்றனா்.

அதேநேரம், இந்திய நகை விற்பனையாளா்களின் லாப விகிதம் 5 முதல் 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சா்வதேச அளவான 12 சதவீதத்தைவிட குறைவாகும். இதன்காரணமாக, இந்திய நகை வா்த்தகத்தில் மூலதன முடக்கம் மற்றும் லாபம் குறித்த அழுத்தங்கள் நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.