பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

இந்தியப் பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக ‘காளை’ உற்சாகம்

News image
Updated On :26 ஜூன் 2026, 4:12 am IST

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் பல்வேறு சாதகமான சூழல் முதலீட்டாளா்களின் உணா்வை உற்சாகப்படுத்தியதால், சந்தை மகிழ்ச்சியுடன் எழுச்சி கண்டது. எனினும், வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கு சந்தை விடுமுறை என்பதால் வா்த்தகத்தின் பிற்பாதியில் முதலீட்டாளா்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனா். இதனால், பெரிய ஏற்றம் தவிா்க்கப்பட்டது.

சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 109.25 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 77,100.47-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 34 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 34.35 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,056-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.