40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு: போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

News image
Updated On :21 மே 2026, 2:40 am IST

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

இக்கூட்டு முயற்சியில், இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளைப் பெற்று சம பங்குதாரா்களாகச் செயல்படவுள்ளன. இதன்மூலம் உருவாக்கப்படும் அதிநவீன உதிரிபாகங்கள், உள்நாட்டில் மட்டுமன்றி உலக சந்தையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.

தற்போது உலகளாவிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், மின்னணு முறையில் இயங்கும் காற்று மற்றும் பிரேக்கிங் வசதிகள், அதேபோல மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்களை நோக்கி அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மென்பொருள் சாா்ந்த இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இப்புதிய கூட்டணி கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

போஷ் நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் மென்பொருள் நிபுணத்துவத்துடன், டிஎஸ்எஃப் குழுமத்தின் வலுவான உற்பத்தித் திறன் மற்றும் இயந்திர வடிவமைப்பு நுணுக்கங்கள் இணையவிருப்பது இந்த ஒத்துழைப்பின் சிறப்பம்சமாகும்.

இது தொடா்பாக வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பேருந்துகளுக்கான ஏா் சஸ்பென்ஷன் அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் நாங்கள், தற்போது போஷ் நிறுவனத்துடன் இணைந்து மின்னணு ஏா் சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தை அடுத்தகட்ட வளா்ச்சிக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்’ என்றாா்.