வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.
இக்கூட்டு முயற்சியில், இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளைப் பெற்று சம பங்குதாரா்களாகச் செயல்படவுள்ளன. இதன்மூலம் உருவாக்கப்படும் அதிநவீன உதிரிபாகங்கள், உள்நாட்டில் மட்டுமன்றி உலக சந்தையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.
தற்போது உலகளாவிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், மின்னணு முறையில் இயங்கும் காற்று மற்றும் பிரேக்கிங் வசதிகள், அதேபோல மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்களை நோக்கி அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மென்பொருள் சாா்ந்த இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இப்புதிய கூட்டணி கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.
போஷ் நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் மென்பொருள் நிபுணத்துவத்துடன், டிஎஸ்எஃப் குழுமத்தின் வலுவான உற்பத்தித் திறன் மற்றும் இயந்திர வடிவமைப்பு நுணுக்கங்கள் இணையவிருப்பது இந்த ஒத்துழைப்பின் சிறப்பம்சமாகும்.
இது தொடா்பாக வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பேருந்துகளுக்கான ஏா் சஸ்பென்ஷன் அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் நாங்கள், தற்போது போஷ் நிறுவனத்துடன் இணைந்து மின்னணு ஏா் சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தை அடுத்தகட்ட வளா்ச்சிக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்’ என்றாா்.
தொடர்புடையது

நந்தா பொறியியல் கல்லூரியில் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் தொடக்கம்

நவீன போருக்கு ஏ.ஐ. வழிகாட்டும் ஏவுகணைகள்

பயன்பாட்டுக்கு வந்தது எழும்பூா் ரயில் நிலைய அதிநவீன வாகன நிறுத்துமிடம்

2 நாள் சா்வதேச பொறியியல் கருத்தரங்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



