அதாவது, ஒரு நபர் பாதிப்புக்கு உள்ளாகும்போது, அவருடன் அதிக ஆட்கள் இருக்கும்பட்சத்தில், பாதிப்பிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு, நிற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு மாறுபடுகிறது. ஒரு பொது இடத்தில் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். அடுத்த 45 விநாடிகளில் அவர் காப்பாற்றப்படுவாரா இல்லையா என்பதற்கான சாத்தியக்கூறு, அவருடன் ஒரே ஒரு நபர் நிற்கும்போது 50 சதவீதம் என்றால், அதே இடத்தில் ஐந்து ஆட்கள் நின்றுகொண்டிருந்தால் 0 சதவீதம். இந்த சமன்பாட்டு முரண்நகை அதீதமாக இருக்கலாம். ஆனால், இதில் ஒரு உண்மையும் இருக்கிறது.