அதே நேரத்தில், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், உயிரியலாளர்கள் உயிரை ஒரு மர்மமாகத்தான் பார்த்தார்கள். டார்வினின் பரிணாம அறிவியல், உயிர்களின் வளர்ச்சி குறித்து பரந்துபட்டதும், ஆழமானதும், முழுமைத்தன்மை கொண்டதுமான ஒரு பார்வையை அளித்திருந்தது. ஆனால், உயிர் என்றால் என்ன என்பதையோ அல்லது உயிரின் தொடர்ச்சி எப்படி நிகழ்கிறது என்பதையோ அதனால் விளக்க முடியவில்லை. உயிர் என்பது பருப்பொருள் சாராத ஒரு அற்புதம் என்பதாகவே, பொதுவாக உயிரியியலாளர்கள் மத்தியில் ஒரு எண்ணம் நிலவியது. ஆக, இயற்பியலும் உயிரியியலும் ஒரு நூற்றாண்டுக்கு முன் எதிரெதிர் நிலைபாடுகளில் இருந்தன எனச் சொல்லலாம்.