

தேவையானவை
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
துவரம் பருப்பு – ½ டீஸ்பூன்
கடலை பருப்பு – ½ டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி – ¼ டீஸ்பூன்
செய்முறை
புழுங்கல் அரிசி மற்றும் பருப்புக்களை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அவற்றை கொரகொரப்பாக அரைக்கவும். இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்ப்பிலை போட்டு தாளிக்கவும்.
தோசை கல்லில் துளி எண்ணெய் விட்டு தோசை வார்த்து மூடி போட்டு வேக விடவும். பிறகு திருப்பிப் போடவும். ஆவியில் நன்கு வேக விடவும்.
சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்திருப்பதால் பித்தம் நீங்கும். பசியை தூண்டும். ஜீரணம் ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.