சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பருப்புப் பொடி

அவசரத்திற்கு உணவு விடுதிக்குச் செல்லாமல் ருசியாக சாப்பிடலாம்.

News image
Updated On :4 நவம்பர் 2016, 6:30 pm

மரகத மீனாட்சி

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுந்தம்பருப்பு - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 12
பெருங்காயம் - சிறுகட்டி

(பெருங்காயப் பொடிக்குப் பதில் கட்டிப் பெருங்காயம் வாசமாகவும் மருத்துவபலன் அதிகமாகவும் இருக்கும். பெருங்காயம் வாங்கி சிறு

துண்டுகளாகப் பிய்த்து இரண்டு நாள் ஒரு தட்டில் வைத்திருந்தால் காய்ந்துவிடும். பின் ஐந்தறைப் பெட்டியில் போட்டுவிடலாம்).

கல் உப்பு- தேவையான அளவு (அயோடைஸ்டு கல் உப்பில் பலவித உப்பு சத்து உள்ளது.)

செய்முறை

பருப்புகளை வெறும் வாணலியில் மிதமான தீயில் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் மிளகாய் வற்றல், பெருங்காயம், கல் உப்பு மூன்றையும் வெறும்

வாணலியில் வறுக்கவும்.

ஒன்றாக மிக்சியில் அரைக்கவும். சலிக்க வேண்டியதில்லை.

சலிக்க விரும்பினால் மிளகாய் போடாமல் அரை சலித்துவிட்டு அந்த மாவில் சிறிது மிக்சியில் போட்டு மிளக்காயையும் போட்டுத் அரைக்கலாம். இல்லாவிடில்

சலிக்கும் போது மூக்கில் ஏறும்.

சாப்பிடும் முறை:

சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பருப்புப் பொடி போட்டு சுண்டை வற்றல் அல்லது அப்பளம் தொட்டு சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும்.

அவசரத்திற்கு உணவு விடுதிக்குச் செல்லாமல் ருசியாக சாப்பிடலாம்.

மரகத மீனாட்சி ராஜா

மரகத மீனாட்சி ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.