பனீர் சப்பாத்தி ரோல்

கோதுமை மாவை பிசைந்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
பனீர் சப்பாத்தி ரோல்
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - 1 கிண்ணம்
பனீர் - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
தக்காளி  - 1

செய்முறை:

கோதுமை மாவை பிசைந்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.

வாணலியில்  எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி வதக்கவும்.

அத்துடன் பனீர் சேர்த்து வதக்கவும். அடுத்து, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு, சேர்த்து வதக்கி 5 நிமிடம்  மூடிவிடவும்.

பின்னர், மசாலா கலவையை இறக்கி சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com