பதச் சேதம் | சொற் பொருள் |
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி தலையரு(ம்) நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்
| சருவி: சண்டையிட்டு; மருண்டு: அஞ்சி; வெகுண்டு: கோபித்து; சமயம்: நெறி—அல்லது—இறைவன்; பறிதலையர்: சமணர்; |
சலிகையு(ம்) நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும்
| சலிகை: செல்வாக்கு; நன்றி: உபகார குணம்; கனம்: மிகுதி; பயில் சரவணம்: பழகிய சரவணப் பொய்கை; பொறை: பொறுமை; தனிவேல்: ஒப்பற்ற வேல்; |
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின்
| விருது: வெற்றிச் சின்னம்; துலங்க: விளங்க; சிகண்டி: மயில்; அண்டர்: தேவர்கள்; விதரணம்: கொடை; திறம்: ஆற்றல்; தரம்: மேன்மை; தினைப்புன மான்: வள்ளி; |
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல விஜயமும் அன்பின் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே
| ம்ருகமதம்: மிருகமதம், கஸ்தூரி; விஜயம்: வெற்றிச் செயல்; |
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன்
| அவுணர்: அரக்கர்; அடங்க: அனைவரும், முழுவதும், முற்றிலும்; இந்து: சந்திரன்; |
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை கணவர் ரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி
| கடம்: மதம்; கடகரி: மதயானை—கஜேந்திரன்; புயல்: மேகம், மேக நிறத்தவன்; இந்திரை: திருமகள்; சகடு: சக்கரம்—சகடாசுரன்; |
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி
| மருது: மருதமரம்; நலங்க: நொந்து போக; முனிந்திடு: கோபிக்கும்; அலங்கல்: மாலை; குறள்: வாமனன்; மீளி: பராக்கிரமம், வலிமை உடையவன்; |
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரம புரம் தனிலும் குகன் என்பவர் மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே.
| மருக: மருமகனே; புரந்தரன்: இந்திரன்; பிரமபுரம்: சீர்காழி; |
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/256451835&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p><strong>சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு</strong>... (மாறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தமக்குள்ளே) சண்டையிட்டும், ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசியும், பயந்தும், கோபித்தும்;</p><p>(<em>சதையைச் சிலகைக் கொளமற் றதனைச் <u>சருவிச் சருவிப்</u> பறிக்கு மொருதிரள்—செருக்களத்து அலகை வகுப்பு. முருகன் போரிட்ட களத்தில் பேய்களில் சில சதைகளைக் கையில் எடுத்துக் கொள்ளும்; அப்படி எடுத்துக் கொண்ட சதையை, மற்ற பேய்கள் <u>சண்டையிட்டு சண்டையிட்டுப்</u> பிடுங்கிக் கொள்ளும்)</em></p><p><strong>சமயமும்</strong> <strong> ஒன்றிலை யென்ற வரும்</strong> ... நெறிமுறை என்றொன்று (அல்லது தெய்வம் என்றொன்று) இல்லை என்பவர்களும்;</p><p><strong>பறிதலையரு நின்று கலங்க</strong> ... சமணர்களும் என எல்லோரும் நின்று கலங்கும்படியாக,</p><p><em>(சமணர் தலைமுடியை மழிக்காமல் கையாற் பறித்துக் களைவதால் பறிதலையர் என்பது அவர்களைக் குறிக்கும்)</em></p><p><strong>விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையும்</strong> ... அனைவரும் விரும்புகின்ற தேவாரப் பண்களைப் பாடிய (திருஞான சம்பந்தராக அவதரித்த உன்னுடைய) செல்வாக்கையும்;</p><p><strong>நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும்</strong> ... உபகார குணத்தையும் வெற்றியையும் மங்களம் நிறைந்ததான பலவிதமான பெருமைகளையும்;</p><p><strong>கனமுங்குணமும்பயில் சரவணமும்</strong> ... மிகுதியான—அளவிறந்த—நற்குணங்களையும்; (உன்னுடைய குழந்தைப் பருவத்திலே நீ) நடை பழகிய சரவணப் பொய்கையையும்;</p><p><strong>பொறையும்புகழுந்திகழ் தனிவேலும்</strong> ... உன்னுடைய பொறுமையும் புகழும் விளங்கித் தோன்றும் ஒப்பற்ற வேலையும்;</p><p><strong>விருது துலங்க சிகண்டியில்</strong> ... வெற்றிச் சின்னங்கள் விளங்கித் தோன்றும்படியாக மயிலில் (தோன்றி),</p><p><strong>அண்டரும் உருகி வணங்கவரும்பதமும்</strong> ... அனைத்து தேவர்களும் மனமுருகி வணங்குவதற்காக வந்து அடையும் திருவடியையும்;</p><p><strong>பல விதரணமுந்திறமுந் தரமும்</strong> ... (உன்னுடைய) பலவகையான கொடைகளையும்; ஆற்றலையும்; மேன்மையையும்;</p><p><strong>தினைப் புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து</strong> ...தினைப்புனத்தில் மான்போல விளங்கி வள்ளிப் பெருமாட்டியுடைய—கஸ்தூரியையும் குங்குமத்தையும் அணிந்த—மார்பகத்தில் மயங்கிச் சாய்ந்து;</p><p><br /><strong>அடி வருடி மணந்து புணர்ந்ததுவும்</strong> ... அவரது திருவடிகளை வருடி, திருமணம் செய்துகொண்டு கலந்தததையும்;</p><p><strong>பல விஜயமும் </strong>... பலவகையான வெற்றிச் செயல்களையும்;<strong /></p><p><strong>அன்பின் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே</strong> ... அன்போடு சொல்லிச் சொல்லிப் பாராட்டுகின்ற தன்மையை நான் ஒருபோதும் மறவேன்.</p><p><strong>கருதி யிலங்கை யழிந்து விடும்படி</strong> ... ராவணன் செய்த பிழையைக் கருதி, அந்தக் காரணத்தால் இலங்கை அழிந்து போகும்படியும்;</p><p><strong>அவுணர் அடங்க மடிந்து விழும்படி</strong> ... அத்தனை அரக்கர்களும் இறந்து போகும்படியும்;</p><p><strong>கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன்</strong> ... சூரிய சந்திரர்கள் முன்போல ஒளியோடு விளங்கும்படியும் செய்த (ராமனாகிய) திருமாலுக்கு;</p><p><br /><strong>கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு</strong> ... மதங்கொண்ட யானையான கஜேந்திரன் (முதலையால் துன்புற்று) பயந்து நடுங்கி வருத்தமடைந்து நின்ற,</p><p><strong>மடுவினில் வந்துதவும் புயல்</strong> ... குளத்துக்கே வந்து உதவிய மேகவண்ணனும்,</p><p><strong>இந்திரை கணவன் அரங்க முகுந்தன்</strong> ... திருமகள் கணவனும், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட முகுந்த(னுமாகிய திருமாலுக்கு);</p><p><strong>வருஞ்சகடற மோதி</strong> ... கொல்வதற்காக உருண்டுவந்த சகடாசுரனைக் காலால் உதைத்து நொறுக்கியவனும்</p><p><strong>மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன்</strong> ... மருதமரங்கள் குலுங்கு நொந்து போகும்படிக் கோபித்த வரத(ன் கண்ணனாகிய திருமாலுக்கு);</p><p><strong>அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன்</strong> ... மாலையை அணிந்து கொண்டு அருளியவனான வாமன மூர்த்தி(யாக வந்த திருமாலுக்கு);</p><p><br /><strong>நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக</strong> ... நீண்ட கடல் வற்றிப் போகும்படி ஓர் அம்பைக் கையில் பற்றி எடுத்த பராக்ரமசாலியான (ராமனாக வந்த திருமாலுக்கு) மருமகனே!</p><p><em>(திருமால் கடலை வற்ற அடித்தது ராமாயணத்தில் சேதுபந்தன சமயத்தில்)</em></p><p><strong>புரந்தரனுந் தவ மொன்றிய பிரமபுரந் தனிலும்</strong> ... இந்திரனும் பொருந்தியிருந்து தவம் செய்ததான சீர்காழியிலும்,</p><p><strong>குக னென்பவர் மனதினிலும்</strong> ... ‘குகா!’ என்று அழைப்பவர்களுடைய மனங்களிலும்,</p><p><strong>பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே.</strong> ... அன்பு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே!</p><p><strong><em> </em></strong></p><p><strong><em>சுருக்க உரை</em></strong></p><p><em>ராவணன் செய்த பிழையை எண்ணி இலங்கை அழியும்படியும், அரக்கர்கள் மாளும்படியும், சூரிய சந்திரர்கள் பழையபடி ஒளியுடன் விளங்கும்படியும் செய்த ராமன்; முதலையால் கவ்வப்பட்டு அஞ்சி நடுங்கி வருந்தியிருந்த மதங்கொண்ட யானையான கஜேந்திரன் இருந்த குளத்துக்கே நேரில் வந்தருளிய பெருமான்; திருமகளுடைய கணவன்; ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் முகுந்தன்; தன்னைக் கொல்லவந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்த, மருதமரங்கள் குலுங்கும்படி அவற்றை வீழ்த்திய வரதனான கண்ணன்; நீண்ட கடல் வற்றிப் போகும்படி கையில் அம்பைப் பிடித்த ராமன்—என்று இவ்வாறெல்லாம் வந்தும் அருளியும் செய்த திருமாலுடைய மருமகனே! இந்திரனும் பொருந்தியிருந்து தவமியற்றிய சீர்காழிப் பதியிலும், ‘குகா’ என்று அழைப்பவர்களுடைய மனங்களிலும் ஒன்றுபோல அன்புடன் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p><em>மாறுபாடுடைய மதங்களைச் சேர்ந்த, ஒருவரையொருவர் பழித்தும் அஞ்சியும் கோபித்தும் திரியும் மதவாதிகளும்; கடவுளென்று ஒருவர் இல்லை என்பவர்களும்; முடியைக் கையால் பறித்து நீக்கும் சமணர்களும்—அனைவரும் கலங்கும்படியாக; அனைவரும் விரும்பும்படியான தேவாரப் பதிகங்களைப் பாடிய திருஞான சம்பந்தராக அவதரித்த உன்னுடைய ஆற்றலையும்; உபகார குணத்தையும்; வெற்றியையும்; பெருமையையும்; நற்குணங்களையும்; பொறுமையையும்; புகழையும்; ஒப்பற்ற வேலையும்; வெற்றிச் சின்னங்கள் விளங்கும்படி நீ மயில்மீது தோன்றுகையில் தேவர்களும் வந்து வணங்குகின்ற உன்னுடைய திருவடிகளையும்; உன் கொடைத் தன்மையையும்; நீ வள்ளியம்மையைச் சுற்றி வந்து அவரது திருவடிகளை வருடி, மணம்புரிந்து கொண்டதையும் என்னாளும் சொல்லிச் சொல்லித் துதிப்பேன். ஒருநாளும் மறவேன்.</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

