ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 207

யானைமுகத்தைக் கொண்ட கணபதிக்கு இளையவனே!  உமையம்மைக்கு மகனே!  எனக்கு ஜபமாலையைத் தந்தருளிய சற்குருநாதா!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!

Updated On :8 ஏப்ரல் 2016, 7:36 am

பதச் சேதம்

சொற் பொருள்

அபகார நிந்தை பட்டு உழலாதே

அபகாரம்: தீங்கு; நிந்தை: வசவு;

அறியாத வஞ்சரை குறியாதே

 

அறியாத: நன்னெறியை உணராத; குறியாதே: கருதாமல்;

உபதேச மந்திர பொருளாலே

 

உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ

 

 

இபமா முகன் தனக்கு இளையோனே

இபம்: யானை; மாமுகன்: பெரிய, உயர்ந்த முகன்;

இமவான் மடந்தை உத்தமி பாலா

 

 

ஜெமாலை தந்த சற் குரு நாதா

 

திருவாவினன் குடி பெருமாளே.

 

 

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257928523&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p><p align="justify"><strong>அபகார நிந்தைபட்டு</strong> ... மற்றவர்களுக்குச் செய்த தீங்குகளால் வசவுக்கு ஆளாகி</p><p align="justify"><strong>உழலாதே</strong> ... துன்பத்தால் உழன்று திரியாமலும்;</p><p align="justify"><strong>அறியாத வஞ்சரை</strong> ... நன்னெறியை அறியாத வஞ்சகர்களை</p><p align="justify"><strong>குறியாதே</strong> ... மனத்தாலும் கருதாமலும்;</p><p align="justify"><strong>உபதேச மந்திரப் பொருளாலே</strong> ... ‘சும்மா இரு சொல்லற’ என்று எனக்கு நீயருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே கடைப்பிடித்து,</p><p align="justify"><strong>உனை நான் நினைந்து</strong> ... நான் எப்போதும் உன்னை நினைத்தபடி</p><p align="justify"><strong>அருள் பெறுவேனோ?</strong> ... உன்னுடைய திருவருள் பெறக் கிடைப்பேனோ?</p><p align="justify"><strong>இபமா முகன்</strong> ... சிறந்த யானைமுகத்தை உடையவனான கணபதி</p><p align="justify"><strong>தனக் கிளையோனே</strong> ... தனக்குத் தம்பியானவனே</p><p align="justify"><strong>இமவான் மடந்தை</strong> ... இமயராஜன் மகளான (உமையம்மையாகிய)</p><p align="justify"><strong>உத்தமிபாலா</strong> ... உத்தமியின் பிள்ளையே</p><p align="justify"><strong>ஜெபமாலை தந்த</strong> ... ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த </p><p align="justify"><strong>சற் குருநாதா</strong> ... நல்ல குரு நாதனே</p><p align="justify"><strong>திருவாவினன் குடி பெருமாளே.</strong> ... திருவாவினன்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>யானைமுகத்தைக் கொண்ட கணபதிக்கு இளையவனே!  உமையம்மைக்கு மகனே!  எனக்கு ஜபமாலையைத் தந்தருளிய சற்குருநாதா!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>பிறருக்குத் தீமை செய்து அதனால் நிந்தனைக்கு ஆளாகித் துன்பத்தில் உழலாமாலும்; நன்னெறியைக் கடைப்பிடிக்காத வஞ்சகரை மனத்தாலும் கருதாமலும்; நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருளைக் கடைப்பிடித்து, உன் திருவருளைப் பெறுவேனோ?  (அப்படிப் பெறுவதற்கு அடியேனுக்குத் துணைசெய்ய வேண்டும்.)</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.