பதச் சேதம் | சொற் பொருள் |
அபகார நிந்தை பட்டு உழலாதே | அபகாரம்: தீங்கு; நிந்தை: வசவு; |
அறியாத வஞ்சரை குறியாதே
| அறியாத: நன்னெறியை உணராத; குறியாதே: கருதாமல்; |
உபதேச மந்திர பொருளாலே |
|
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
|
|
இபமா முகன் தனக்கு இளையோனே | இபம்: யானை; மாமுகன்: பெரிய, உயர்ந்த முகன்; |
இமவான் மடந்தை உத்தமி பாலா
|
|
ஜெமாலை தந்த சற் குரு நாதா |
|
திருவாவினன் குடி பெருமாளே.
|
|
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257928523&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p><p align="justify"><strong>அபகார நிந்தைபட்டு</strong> ... மற்றவர்களுக்குச் செய்த தீங்குகளால் வசவுக்கு ஆளாகி</p><p align="justify"><strong>உழலாதே</strong> ... துன்பத்தால் உழன்று திரியாமலும்;</p><p align="justify"><strong>அறியாத வஞ்சரை</strong> ... நன்னெறியை அறியாத வஞ்சகர்களை</p><p align="justify"><strong>குறியாதே</strong> ... மனத்தாலும் கருதாமலும்;</p><p align="justify"><strong>உபதேச மந்திரப் பொருளாலே</strong> ... ‘சும்மா இரு சொல்லற’ என்று எனக்கு நீயருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே கடைப்பிடித்து,</p><p align="justify"><strong>உனை நான் நினைந்து</strong> ... நான் எப்போதும் உன்னை நினைத்தபடி</p><p align="justify"><strong>அருள் பெறுவேனோ?</strong> ... உன்னுடைய திருவருள் பெறக் கிடைப்பேனோ?</p><p align="justify"><strong>இபமா முகன்</strong> ... சிறந்த யானைமுகத்தை உடையவனான கணபதி</p><p align="justify"><strong>தனக் கிளையோனே</strong> ... தனக்குத் தம்பியானவனே</p><p align="justify"><strong>இமவான் மடந்தை</strong> ... இமயராஜன் மகளான (உமையம்மையாகிய)</p><p align="justify"><strong>உத்தமிபாலா</strong> ... உத்தமியின் பிள்ளையே</p><p align="justify"><strong>ஜெபமாலை தந்த</strong> ... ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த </p><p align="justify"><strong>சற் குருநாதா</strong> ... நல்ல குரு நாதனே</p><p align="justify"><strong>திருவாவினன் குடி பெருமாளே.</strong> ... திருவாவினன்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>யானைமுகத்தைக் கொண்ட கணபதிக்கு இளையவனே! உமையம்மைக்கு மகனே! எனக்கு ஜபமாலையைத் தந்தருளிய சற்குருநாதா! திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>பிறருக்குத் தீமை செய்து அதனால் நிந்தனைக்கு ஆளாகித் துன்பத்தில் உழலாமாலும்; நன்னெறியைக் கடைப்பிடிக்காத வஞ்சகரை மனத்தாலும் கருதாமலும்; நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருளைக் கடைப்பிடித்து, உன் திருவருளைப் பெறுவேனோ? (அப்படிப் பெறுவதற்கு அடியேனுக்குத் துணைசெய்ய வேண்டும்.)</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

