பதச் சேதம் | சொற் பொருள் |
| காதி மோதி வாது ஆடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழ பெறுவோரும் | காதி: காதுதல்—வெட்டுதல்; வெட்டுவதைப் போலப் பேசி; வாதாடு நூல்: தர்க்கம் செய்ய உரிய நூல்கள்; |
| மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே | மாதுபாகர்: மாதொருபாகன், சிவன்; நெக்குருகார்: மனம் கசிந்து உருகாதவர்கள்; மாறு இலாத: மாறுபாடு இல்லாத, நீங்காத, தொலையாத; மா: பெரிய; காலன் ஊர்: யமலோகம்; புக்கு: புகுந்து; |
| நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாக லோகம் ஈரேழு பாருக்கு உரியோனே | நாத ரூப: நாதமே வடிவான; ஆகத்து: (ஆகம்—மார்பு, நெஞ்சு, உள்ளம்) உள்ளம்; நாகலோகம்: சொர்க்கம் (இன்னொரு பொருள்); ஈரேழு பார்: பதினான்கு உலகங்களுக்கும்; |
| தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவ தேவ தேவாதி தேவ பெருமாளே. |
|
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/247640710&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>காதி மோதி வாதாடு</strong> ... வெட்டி வீழ்த்திவிடுவதுபோல (ஆக்ரோஷத்துடன்) தர்க்கம் செய்வதற்கு உரிய</p><p align="JUSTIFY"><strong>நூல்கற்றிடுவோரும்</strong> ... நூல்களைப் பயில்பவர்களும் (போயும் போயும் இத்தகைய நூல்களைப் படித்துக் கொண்டிருப்பவர்களும்);</p><p align="JUSTIFY"><strong>காசு தேடி ஈயாமல்</strong> ... பணத்தைத் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிறருக்கு எதுவும் கொடுக்காமல்</p><p align="JUSTIFY"><strong>வாழப் பெறுவோரும்</strong> ... தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களும்;</p><p align="JUSTIFY"><strong>மாதுபாகர் வாழ்வே யென</strong> ... உமையைத் தன் இடதுபாகத்தில் கொண்டவரான சிவபெருமானுடைய செல்வமே என்று,</p><p align="JUSTIFY"><strong>நெக்குருகாரும்</strong> ... (உன்னை நினைப்பதாலே) மனம் கசிந்து, நெகிழ்ந்து உருகாதவர்களும்;</p><p align="JUSTIFY"><strong>மாறிலாத மாகாலனூர்</strong> ... என்றென்றும் மாறாததாகிய யமதர்மப் பட்டணத்துக்கு (அல்லது, என்றென்றும் தர்ம நெறிகளில் மாறாததாகிய யமலோகத்துக்குச்)</p><p align="JUSTIFY"><strong>புக்கலைவாரே</strong> ... சென்று புகுந்தும் (அதன்பின்னர் மீண்டும் பிறப்பெடுத்தும், மீண்டும் யமலோகம் சென்றும் என) திரிந்துகொண்டிருப்பார்கள்.</p><p align="JUSTIFY"><strong>நாத ரூப</strong> ... நாதமே வடிவாக உள்ளவனே!</p><p align="JUSTIFY"><strong>மாநாதர் ஆகத்து உறைவோனே</strong> ... மகாதேவரான சிவபெருமானுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே!</p><p align="JUSTIFY"><strong>நாகலோக மீரேழு பாருக்கு</strong> <strong>உரியோனே</strong> ... சொர்க்கம் முதலாகிய பதினான்கு லோகங்களுக்கும் உரியவனாக விளங்குபவனே!</p><p align="JUSTIFY">(<em>நாகலோகம் என்பதற்குப் பாதாள லோகம் என்றும் சொர்க்கலோகம் என்றும் இரண்டு பொருளும் உண்டு</em>)</p><p align="JUSTIFY"><strong>தீதி லாத வேல்வீர</strong> ... தீமைகளை இல்லாமல் செய்யும் வேலை ஏந்தும் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>சேவற்கொடியோனே</strong> ... சேவலைக் கொடியாக உயர்த்தியவனே,</p><p align="JUSTIFY"><strong>தேவ தேவ</strong> ... தேவ தேவனே,</p><p align="JUSTIFY"><strong>தேவாதி தேவப் பெருமாளே.</strong> ... தேவாதி தேவர்களுக்கெல்லாம்<br />பெருமாளே.</p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை</em> </strong></p><p align="JUSTIFY"><em>நாதமே வடிவாக உள்ளவனே! மகாதேவரான சிவபெருமானுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே! சொர்க்கம் முதலான ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் உரியவனே! தீமைகளை அழிக்கும் வேலை ஏந்துபவனே! சேவலைக் கொடியாகக் கொண்டவனே! தேவதேவனே! தேவாதி தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்குகின்ற பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>வெறுமனே ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவதற்காகவும் தர்க்கம் செய்வதற்காகவும் (மட்டுமே) (பயனற்றனவான) தர்க்க சாத்திர நூல்களைப் பயின்றுகொண்டிருப்பவர்களும்; பாடுபட்டுப் பொருளைத் தேடி, ஒருவருக்கும் கொடுக்காமல் பதுக்கிவைத்துக் கொள்பவர்களும்; மாதொருபாகனான சிவபெருமானுடைய செல்வமே என்று உன்னை நினைத்து மனம் நெகிழ்ந்து உருகாதவர்களும்—இவர்கள் அனைவரும், மாறுதல் இல்லாத தர்மம் நிலைத்து விளங்குவதான யமலோகத்துக்குப் போயும், மீண்டும் பிறந்தும், மீண்டும் யமலோகத்தை அடைந்தும் என்று அலைச்சலுறுவார்கள். (ஆகவே நான் இப்படிப்பட்ட வாதங்களில் சிக்கிக் கொள்ளாமல்; உன்னையே நினைத்து மனமுருகியபடி நிற்க அருள வேண்டும்)</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

