பதச் சேதம் | சொற் பொருள் |
| தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் | தோதகம்: வஞ்சனை; பூதம்: ஐம்பூதங்கள்; மருள்: மயக்கம், மயக்கத்தால்; பக்க சூலை: விலாப்பக்கங்களில் ஏற்படும் சூலை (விளக்கத்தைப் பார்க்கவும்); வெப்பு: வெப்பம், ஜுரம்; மதநீர்: வீரியத்தோடு தொடர்புள்ள நோய்; தோய்: சேர்ந்து; |
| சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா | சூழ்: எங்கும் பரவி; குற்று: இடிப்பு (மண்டையிடி, தலையிடி); சோகை: ரத்தக் குறைவு; குட்டம்: குஷ்டம்; |
| வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே | வாதம்: வாயு; மூலம்: மூலநோய் (Piles); ஆய: ஆகிய; |
| வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே | முத்தி: முக்தி; |
| காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா | மாதினை விளைத்து: நல்ல தினையை விளைவித்து; |
| காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா | காசினி: உலகம்; ஓடி அளவிட்ட: உலகத்தின் பரப்பு முழுவதிலும் திரிந்து அளவெடுத்த; |
| வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே | வேதமொழி: வேதங்களை, அல்லது வேதத்தை நிகர்த்த திருமுருகாற்றுப் படையை; |
| மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. | மேல்: முன்னர்; வெட்டி: நீக்கி; |
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254767315&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>தோதகம் மிகுத்த பூதம் மருள்</strong> ... வஞ்சனை நிறைந்தவையான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் மயக்கத்தால் (<em>சமமற்ற தன்மையாலே</em>) —</p><p align="JUSTIFY"><strong>பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய்</strong> ... விலாவின் பக்கத்திலே உண்டாகின்ற சூலை நோய்*, வலிப்பு, ஜுரம், விந்து தொடர்பான நோய்களெல்லாம் ஒன்றுசேர்ந்து;</p><p align="JUSTIFY"><em>(* பித்த சூலை, வாத சூலை, சிலேட்டும சூலை, வாதபித்த சூலை, சிலேட்டும பித்த சூலை, ஐயகண சூலை என்னும் சூலை நோய் ஆறு வகைப்படும்)</em></p><p align="JUSTIFY"><strong>சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை</strong> ... எங்கும் பரவித் துன்பத்தை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், மண்டையிடி, ரத்தசோகை, பல வகையான குஷ்ட நோய்களான இவையெல்லாம்,</p><p align="JUSTIFY"><strong>தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே</strong> ... வாயு சம்பந்தமான தீர்க்க முடியாத நோய்கள், பித்த நோய், மூலம், இன்ன வகையான நோய்களெல்லாம் என்னருகிலும் வராதபடி;</p><p align="JUSTIFY"><strong>வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே</strong> ... வருந்துகின்றவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குகின்ற உன்னுடைய பாதத்தில் (பாதத்தின் நிழலில்) நன்கு வாழவைத்து அருளவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா</strong> ... உன்மீது காதல் மிகவும் கொண்டவளும்; நல்ல தினையை விளைவித்தவளும்; காட்டிலே வாழ்ந்த குறத்தியுமான வள்ளியின் மணாளனே!</p><p align="JUSTIFY"><strong>காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா</strong> ... உலகம் முழுவதும் ஓடியும் பறந்தும் திரிந்து அளவெடுத்த நீண்ட கால்களை உடைய பச்சைமயிலில் ஏறும் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே</strong> ... வேதங்களை (அல்லது வேதமே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை) நிரம்ப பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய வேதனைகளைக் களைகின்ற முருகா!</p><p align="JUSTIFY"><strong>மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.</strong> ...முற்காலத்தில் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து தேவர்களை மீண்டும் அமராவதிக்குச் செல்லும்படியாக விடுதலை செய்த பெருமாளே!</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>உன் மீது காதல் கொண்டவளும்; காட்டில் தினைப்புனம் காத்தவளும்; குறத்தி மகளுமான வள்ளியின் மணாளனே! வேதத்தையே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை நிரம்பவும் பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய துக்கங்களை வேரறுக்கும் முருகனே! முன்னர் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து, தேவர்களை அவர்களுடைய அமராவதிப் பட்டணத்துக்கு மீண்டும் செல்லும்படி விடுவித்து அருளிய பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>வஞ்சனை நிறைந்த பஞ்சபூதங்களில் ஏற்படும் மயக்கங்களால் உண்டாவதான பக்கசூலை; வலிப்பு; சுரம்; விந்து தொடர்பான நோய்கள் யாவும் சேர்ந்தும்; எங்கும் பரவி வேதனையை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், இடிப்பது போல உண்டாகும் தலைநோவு; ரத்தமின்மை; பலவகையான குஷ்ட நோய்கள்; வாயு சம்பந்தமான தீராத நோய்கள்; பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள்; மூலம் இவற்றின்மேல் இன்னும் பலவகையான நோய்கள் எவையும் என்னைச் சற்றும் நெருங்கவும் முடியாமல் செய்து; வருந்தி நிற்பவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குவதான உன்னுடைய திருவடி நீழலிலே என்னைத் தங்கும்படிச் செய்தருள வேண்டும்.</em></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

