ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 193

உன் மீது காதல் கொண்டவளும்; காட்டில் தினைப்புனம் காத்தவளும்; குறத்தி மகளுமான வள்ளியின் மணாளனே! 

Updated On :24 மார்ச் 2016, 7:14 am

பதச் சேதம்

சொற் பொருள்

தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் தோதகம்: வஞ்சனை; பூதம்: ஐம்பூதங்கள்; மருள்: மயக்கம், மயக்கத்தால்; பக்க சூலை: விலாப்பக்கங்களில் ஏற்படும் சூலை (விளக்கத்தைப் பார்க்கவும்); வெப்பு: வெப்பம், ஜுரம்; மதநீர்: வீரியத்தோடு தொடர்புள்ள நோய்; தோய்: சேர்ந்து;
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா சூழ்: எங்கும் பரவி; குற்று: இடிப்பு (மண்டையிடி, தலையிடி); சோகை: ரத்தக் குறைவு; குட்டம்: குஷ்டம்;
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே வாதம்: வாயு; மூலம்: மூலநோய் (Piles); ஆய: ஆகிய;
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே முத்தி: முக்தி;
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா மாதினை விளைத்து: நல்ல தினையை விளைவித்து;
காசினி அனைத்தும்  ஓடி அளவிட்ட கால் நெடிய  பச்சை மயில் வீரா காசினி: உலகம்; ஓடி அளவிட்ட: உலகத்தின் பரப்பு முழுவதிலும் திரிந்து அளவெடுத்த;
வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே வேதமொழி: வேதங்களை, அல்லது வேதத்தை நிகர்த்த திருமுருகாற்றுப் படையை;
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. மேல்: முன்னர்; வெட்டி: நீக்கி;

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254767315&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>தோதகம் மிகுத்த பூதம் மருள்</strong> ... வஞ்சனை நிறைந்தவையான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் மயக்கத்தால் (<em>சமமற்ற தன்மையாலே</em>) —</p><p align="JUSTIFY"><strong>பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய்</strong> ... விலாவின் பக்கத்திலே உண்டாகின்ற சூலை நோய்*, வலிப்பு, ஜுரம், விந்து தொடர்பான நோய்களெல்லாம் ஒன்றுசேர்ந்து;</p><p align="JUSTIFY"><em>(* பித்த சூலை, வாத சூலை, சிலேட்டும சூலை, வாதபித்த சூலை, சிலேட்டும பித்த சூலை, ஐயகண சூலை என்னும் சூலை நோய் ஆறு வகைப்படும்)</em></p><p align="JUSTIFY"><strong>சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை</strong> ... எங்கும் பரவித் துன்பத்தை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், மண்டையிடி, ரத்தசோகை, பல வகையான குஷ்ட நோய்களான இவையெல்லாம்,</p><p align="JUSTIFY"><strong>தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே</strong> ... வாயு சம்பந்தமான தீர்க்க முடியாத நோய்கள், பித்த நோய், மூலம், இன்ன வகையான நோய்களெல்லாம் என்னருகிலும் வராதபடி;</p><p align="JUSTIFY"><strong>வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே</strong> ... வருந்துகின்றவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குகின்ற உன்னுடைய பாதத்தில் (பாதத்தின் நிழலில்) நன்கு வாழவைத்து அருளவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா</strong> ... உன்மீது காதல் மிகவும் கொண்டவளும்; நல்ல தினையை விளைவித்தவளும்; காட்டிலே வாழ்ந்த குறத்தியுமான வள்ளியின் மணாளனே!</p><p align="JUSTIFY"><strong>காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா</strong> ... உலகம் முழுவதும் ஓடியும் பறந்தும் திரிந்து அளவெடுத்த நீண்ட கால்களை உடைய பச்சைமயிலில் ஏறும் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே</strong> ... வேதங்களை (அல்லது வேதமே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை) நிரம்ப பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய வேதனைகளைக் களைகின்ற முருகா!</p><p align="JUSTIFY"><strong>மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.</strong> ...முற்காலத்தில் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து தேவர்களை மீண்டும் அமராவதிக்குச் செல்லும்படியாக விடுதலை செய்த பெருமாளே!</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>உன் மீது காதல் கொண்டவளும்; காட்டில் தினைப்புனம் காத்தவளும்; குறத்தி மகளுமான வள்ளியின் மணாளனே!  வேதத்தையே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை நிரம்பவும் பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய துக்கங்களை வேரறுக்கும் முருகனே!  முன்னர் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து, தேவர்களை அவர்களுடைய அமராவதிப் பட்டணத்துக்கு மீண்டும் செல்லும்படி விடுவித்து அருளிய பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>வஞ்சனை நிறைந்த பஞ்சபூதங்களில் ஏற்படும் மயக்கங்களால் உண்டாவதான பக்கசூலை; வலிப்பு; சுரம்; விந்து தொடர்பான நோய்கள் யாவும் சேர்ந்தும்; எங்கும் பரவி வேதனையை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், இடிப்பது போல உண்டாகும் தலைநோவு; ரத்தமின்மை; பலவகையான குஷ்ட நோய்கள்; வாயு சம்பந்தமான தீராத நோய்கள்; பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள்; மூலம் இவற்றின்மேல் இன்னும் பலவகையான நோய்கள் எவையும் என்னைச் சற்றும் நெருங்கவும் முடியாமல் செய்து; வருந்தி நிற்பவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குவதான உன்னுடைய திருவடி நீழலிலே என்னைத் தங்கும்படிச் செய்தருள வேண்டும்.</em></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.