ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 235

சமண நீசர்கள் கழுவிலேறி மாளும்படியாக வாதிட்டு வென்ற திருஞானசம்பந்தராக வந்த சிகாமணியே!  மயிலேறும் வீரனே!  நஞ்சை உண்ட கண்டனும் உமாதேவியாரின் பதியுமான சிவபெருமானுடைய பாலனே! 

Updated On :4 மே 2016, 10:02 am

பதச் சேதம்

சொற் பொருள்

வேழம் உண்ட விளா கனி அது போல

 

வேழம்: பழங்களைத் தாக்கும் ஒருவகை நோய்; விளாகனி: விளாம்பழம்;

மேனி கொண்டு வியாபக மயல் ஊறி

 

நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி

 

மிண்டர்: அறிவற்றோர்;

நானும் நைந்து விடாது அருள் புரிவாயே

 

மாள அன்று அமண் நீசர்கள் கழு ஏற

அமண்: சமண;

வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா

 

சிகாமணி: சிகையில் (தலையில்) உள்ளதான மணி;

காள கண்டன் உமாபதி தரு பாலா

காளம்: விஷம்;

காசி கங்கையில் மேவிய பெருமாளே.

 

 

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262431529&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify">காள கண்டன் = விடமுண்ட கண்டனாகிய. உமாபதி = உமா தேவியின் கணவனான சிவபெருமான். தரு பாலா = பெற்ற பிள்ளையே. கங்கை = கங்கை நதிக் கரையில் உள்ள. காசியில் மேவிய பெருமாளே = காசித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.</p><p align="justify"><strong>வேழ முண்ட விளாகனி யதுபோல</strong> ... வேழம் என்ற நோய் தாக்கிய விளாம்பழத்தைப் போல,</p><p align="justify"><em>(இந்த நோயால் தாக்கப்பட்ட விளாம்பழத்தின் ஓடுமட்டும் அப்படியே இருக்கும்; உள்ளே இருப்பதான சதைப்பற்று இருக்காது.  ஓடு உள்ளிடற்றதாக (hollow) இருக்கும்)</em></p><p align="justify"><strong>மேனி கொண்டு வியாபக மயலூறி</strong> ... உடலெங்கும் காம இச்சையானது ஊறிப் பரவி, (உள்ளே இருக்கும் சத்தெல்லாம் அழிந்து, உடல் என்ற வெறும் கூடுமட்டுமே எஞ்சியிருக்க)</p><p align="justify"><strong>நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி</strong> <strong>நானு</strong>... அறிவற்ற மூடர்களைப் போல நானும் தினந்தோறும் தளர்ச்சியடைந்து,</p><p align="justify"><strong>நைந்து விடாதருள் புரிவாயே</strong> ... நைந்துபோய் வாட்டமடையாதபடி அருள்செய்ய வேண்டும்.</p><p align="justify"><strong>மாள அன்று அமணீசர்கள் கழுவேற</strong> ... அன்றொருநாள், நீசர்களாகிய சமணர்கள் கழுவிலே ஏறும்படியாக,</p><p align="justify"><strong>வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா</strong> ... வாதிட்டு வென்ற திருஞான சம்பந்தராக வந்த உயர்ந்த மாணிக்கமே, மயிலேறும் வீரனே!</p><p align="justify"><strong>காள கண்ட னுமாபதி தருபாலா</strong> ... விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தையுடையவரான உமாபதியின் பாலனே!</p><p align="justify"><strong>காசி கங்கையில் மேவிய பெருமாளே.</strong> ... கங்காதீரத்திலுள்ள காசி நகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>சமண நீசர்கள் கழுவிலேறி மாளும்படியாக வாதிட்டு வென்ற திருஞானசம்பந்தராக வந்த சிகாமணியே!  மயிலேறும் வீரனே!  நஞ்சை உண்ட கண்டனும் உமாதேவியாரின் பதியுமான சிவபெருமானுடைய பாலனே! </em></p><p align="justify"><em>வேழம் என்னும் நோயால் தாக்கப்பட்ட விளாம்பழமானது, உள்ளேயிருக்கும் சத்தையிழந்து, வெளிக்கூடு மட்டுமே மிஞ்சியிருப்பதைப் போல, மேனியெங்கும் காம இச்சை பரவி, நான் உள்ளே இருக்கும் சத்தை (சத்துவத்தை) இழந்து, வெறும் வெளிக்கூடாய் மிஞ்சிவிடாமலும்; மூடத்தனத்தில் திண்மையான உறுதியைக் கொண்ட மிண்டர்களைப் போல (மூடர்களைப் போல) நானும் உடல்தளர்ந்து மெலிந்து வாட்டமுறாமலும் அருள்வாயாக.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.