ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 637

சூழ்ந்துள்ள தீவினைகள்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2017, 3:21 am

பதச் சேதம்

சொற் பொருள்

சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம்

 

வினைக்கண்: வினையின் காரணமாக; கழி: அளவற்ற;

சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே

 

சோரம்: களவு; துணை யாதே: எது துணை, யார் துணை

ஏழையென் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ

 

ஏழையென்: ஏழையேன் (குறுக்கல் விகாரம்);

ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே

 

ஏதம்: குற்றம்;

ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே

 

எழு நாளே: ஏழு நாளில்;

ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே

 

ஆண்மை செலுத்தி: ஆண்மையை (வீரத்தைக்) கொண்டு; கரும்புயல்: ராமன், திருமால்;

வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே

 

 

வேத வனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே.

 

வேதவனம்: வேதாரணியம்;

சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி கழிகாமஞ்... (என்னைச்) சூழ்ந்துள்ள தீவினைகளின் காரணமாக வருகின்ற பெரிய நோய்களும் அளவுகடந்த காமமும்;

சோரம் இதற்கு  சிந்தை நினைந்து உறுதுணை யாதே... களவும் ஆகிய இவற்றையே மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பேன் என்றால் எனக்கு யார்தான் உற்ற துணைவராக முடியும்?

ஏழையென் இத்துக்கங்களுடன் தினம் உழல்வேனோ... ஏழையேனான அடியேன் இத்தகைய துக்கங்களோடே தினமும் அல்லலுற வேண்டுமோ? (அல்லலுறாது காத்தருள வேண்டும்.)

ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே... இத்தகைய குற்றங்களை நீக்கி, (நான்) உன்னுடைய சிவந்த பாதங்களைச் சிந்திக்கும்படியாகச் செய்யவேண்டும்.

ஆழியடைத்துத் தன்கை இலங்கையை  எழுநாளே…... கடலை அணைகட்டி அடைத்து ஏழே நாளில் இலங்கையைத் தன்வசப்படும்படியாக,

ஆண்மை செலுத்திக் கொண்ட  கரும்புயல் மருகோனே... தன் வீரத்தைக் காட்டி வெற்றிகொண்ட கரிய மேகத்தை ஒத்த ராமனுடைய மருகனே!

வேழமுகற்கு தம்பியெனுந் திரு முருகோனே... யானைமுகத்து விநாயகனுடைய தம்பியாக விளங்குகின்ற திருமுருகனே!

வேதவனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.... வேதாரணியத்தில் வீற்றிருக்கின்ற சங்கரனார் தந்தருளும் பெருமாளே!


சுருக்க உரை:

கடலை அணைகட்டி அடைத்துத் தன் வீரத்தினால் ஏழே நாளில் தன்வசப்படுத்திய கருமேகத்தை ஒத்த இராமனுடைய (திருமாலுடைய) மருகனே!  யானை முகத்து கணபதியின் தம்பியாக விளங்குகின்ற திருமுருகனே!

அடியேனைச் சூழ்ந்துள்ள வினைகளின் காரணமாக வருகின்ற துன்பம், பெரிய நோய்கள், அளவுகடந்த காமம், திருட்டு என்று இவற்றையே நான் நினைத்துக் கொண்டிருந்தால் (இந்த வழியிலேயே சென்றுகொண்டிருந்தால்),  எனக்கு உற்ற துணைவராக எதுதான் (அல்லது யார்தான்) இருக்கமுடியும்?  ஏழையேன் இத்தகைய துன்பங்களோடு தினமும் உழன்றுகொண்டிருப்பேனோ? (அவ்வாறு உழலாதபடி ஆண்டுகொண்டு அருளவேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.