ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 737

பிரம்மனுடைய மைத்துனனே!

News image
Updated On :15 ஜனவரி 2018, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

நீ தான் எத்தனையாலும்

எத்தனையாலும்: எல்லா வகையிலும்;

நீடூழி க்ருபையாகி 

 

 

மா  தான தனமாக

 

மா ஞான கழல் தாராய்

 

வேதா மைத்துன வேளே

வேதா: பிரமன்; வேதா மைத்துன: (பிரமன் திருமாலின் மகன் என்பதால்) பிரமனை மாமன் மகனாக உடைய;

வீரா சற்குண சீலா

 

 

ஆதாரத்து ஒளியானே

 

ஆரூரில் பெருமாளே.

 

 

நீதானெத் தனையாலும் நீடூழிக் க்ருபையாகி... நீயே எல்லா வகையிலும் நீடுழிக் காலத்துக்கும் கிருபை நிறைந்தவனாகி,

மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய்... ஞான சொரூபமாகிய உன்னுடைய திருவடிகளை எனக்கு தானப்பொருளாகத் தரவேண்டும்.

வேதாமைத்துனவேளே வீரா சற்குணசீலா... பிரம்மனுடைய மைத்துனனே! வேளே! சற்குணங்கள் நிறைந்த சீலனே!

ஆதாரத்து ஒளியானே ஆரூரிற் பெருமாளே..... (மூலாதாரம் முதலான) ஆறு ஆதாரங்களிலும் ஒளியாக விளங்குபவனே! திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

பிரமனை மாமன் மகனாக உடையவனே! வேளே! சற்குண சீலனே! ஆறு ஆதாரங்களிலும் பிரகாசிப்பவனே! திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

நீயே எல்லா வகையாலும் என்மீது நீடுழிக் காலத்துக்கும் கிருபை கொண்டவனாகி, சிறந்த தானப் பொருளாக ஞான ஸ்வரூபமாகிய உன்னுடைய திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.