ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 746

என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு

News image
Updated On :24 ஜனவரி 2018, 6:30 pm

‘என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு, ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் இவை அமைப்பில் மாறுபட்டவை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனத்தந் தானன தனத்தந் தானன
      தனத்தந் தானன                    தனதான

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
         கருப்பஞ் சாறெனு                மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
         கடைக்கண் பார்வையி            லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
         விருப்பஞ் சாலவு                 முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
         விடற்கஞ் சேலென               அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
         அறுக்குங் கூரிய                 வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
         யடுக்கும் போதக                 முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
         திருச்செங் கோபுர                வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
         திருச்செங் கோடுறை             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.