04.09.1596 ஜப்பானை முதல் சுனாமி தாக்கிய நாள் 

ஜப்பானின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சுனாமிகளில் முக்கியமான ஒரு சுனாமி ஜப்பானை தாக்கிய நாள் இன்று. 
04.09.1596 ஜப்பானை முதல் சுனாமி தாக்கிய நாள் 
Updated on
1 min read

ஜப்பானின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சுனாமிகளில் முக்கியமான ஒரு சுனாமி ஜப்பானை தாக்கிய நாள் இன்று.
ஜப்பானின் தென் பகுதியில் அமைந்திருக்கின்ற முக்கியமான தீவான க்யுஷுயின் கடற்கரை இந்த சுனாமியால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
க்யுஷு கடற்கரையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெப்பு வளைகுடாவில் ஏற்பட்ட மிகச் சிறிய நிலநடுக்கம் ஒன்றே இந்த சுனாமிக்கு காரணமாக அமைந்தது. அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், இதன் காரணமாக பெப்பு கடல்பகுதியில் நிலச்சரிவு உண்டானது.இதன் காரணமாக அளவுக்கு அதிகமான கடல் நீர் தீவின் உள்ளே புகுந்தது.
இதன் காரணமாக இந்த தீவே ஏறக்குறைய நீரில் மூழ்கியது. 5000 மக்கள் தொகை கொண்ட இந்த தீவில், 1000 பேர் இறந்து போயினர். சுனாமிக்கு பின்னர் இந்த தீவு மக்கள் வாழ தகுதியில்லாத ஒரு இடமாக மாறிப்போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com