செப்டம்பர் 6 – தேசிய புத்தக வாசிப்பு தினம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6-ஆம் தேதி தேசிய புத்தக வாசிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 6 – தேசிய புத்தக வாசிப்பு தினம்!
Published on
Updated on
1 min read

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6-ஆம் தேதி தேசிய புத்தக வாசிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் எழுத்தாளர்களும் சரி, வாசகர்களும் சரி, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்தைகளை வாசிப்பதால் கிடைக்கும் இன்பத்தில் முழுமையாக திளைக்கலாம்.

தேசிய புத்தக வாசிப்பு தினம் என்பது 2௦௦௦-மாவது ஆண்டின் இறுதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோசனை சிறுவர்களை புத்தக வாசிப்புக்கு பழக்கும் வகையில், அநேகமாக யாரோ ஒரு நூலகரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும்.   

இந்த நல்ல தினத்தில் ஒரு முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை.ஒரு புத்தகத்தின் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்கலாம்.குழந்தைகளுக்கு வாசித்து காட்டலாம்;வாசிப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்யலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை சிறுவர் நூலகங்களுக்கு பரிசளித்து மகிழலாம்.

வாருங்கள்.. வாசிப்பை நேசிப்போம்..கொண்டாடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com