வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீ கண் சிமிட்டினால்: ஷல்மா ஷாஜஹான்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:42 am

கவிதைமணி

உன் கால்கள் இரண்டும் 
அலைபாயுதே வானில்
சிறகு விரிக்க மறந்த பறவையாக..

வண்ணாத்திப்பூச்சி என்று
வானவில் வர்ணம் பூசி
கோலமிட்டுக் காத்திருக்கிறேன்...

காதல் என்ற சங்கமத்தில்
தோழி என்ற விண்ணப்பத்தில்
நிராகரிப்பு செய்த தூதாக...

பறந்து விரிந்த ஆலவிருட்சம் 
அகன்று விரிந்த அவனியில்
தொலைந்து போனேன்...

மண்புழு துடித்த வேதனை
கண் முன்னே நிழலாக
காதல் மறந்த சாதலாக
மோகம் கண்ட ஓவியமாக...

சொல் ஒன்று வார்த்தை ஆக
மொழி ஒன்று மோடை ஆக
நடை போடும் ஊர்கோலமாக
உருவம் கொண்ட நயமாக...

உன் ஒற்றைக்கண் பார்வை
என்னிதயத் துடிப்பின் தூறல் 
ஆயுள் உள்ள வரை 
நான் வாழ்ந்துகொள்ள.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.