வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் கு. அசோகன்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:42 pm

கவிதைமணி

வஞ்சம் செய்வார்தனை வேண்டி
நட்பு கொள்ளாதடி கிளியே!
 கொஞ்சியே பேசிடுவார் !

குணக்குன்று நீயென்பார் !
மஞ்சத்து மல்லிகைப் போல
மனதார சிரிப்பதாக
மாய்மாலம் காட்டிடுவார்

வஞ்சம் செய்வாரோடு
இணக்கம் கொள்ளாதடி கிளியே!
துஞ்சும் விழிகளிடையே
இமைபோல நானென்பார்
வஞ்சக எண்ணத்தையே
நெஞ்சுக்குள் பதுக்கியே
செந்தேனாய் சொல்வாரடி!

கடுக்கென கோபம் கொண்டால்
கயவரென எண்ணாதடி கிளியே!
தடுக்கிவிழும் வேளையிலே
தாங்கி பிடிப்பவர் இவர்தானடி கிளியே!
கொடுக்குள்ள தேள்குணமாய்
கொண்டவர்தான் வஞ்சக எண்ணமடி
தடுத்துதான் விடவேண்டும்
தங்கமே தருவதென்றாலும் கிளியே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.