தனிமையொடு பேசுங்கள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
தனிமையுடன்   பேசுங்கள்   மனம்தி  றந்து            தன்மையாகப்  பேசுங்கள்   பிறரின்  முன்போஇனிமையாகப்  பேசியவர்   சென்ற  பின்போ            இன்னாத்தீ   செயல்போல   தூற்று   வோரேகனியிருக்கக்  காய்தன்னைத்  தின்னல்  போன்று            கனிவிருக்கக்  கயமையினைச்  செய்தல்  பற்றித்தனிமையுடன்   பேசுங்கள்   மனம்தி  றந்து            தனியாகப்  பேசுங்கள்   தெளிவு  கிட்டும் !தனிமையுடன்  பேசுங்கள்   கொஞ்ச  நேரம்            தனிமையாகக்   பேசுங்கள்   உள்ளத்  துள்ளேகுனியவைக்கும்  கபடுசூடு   தீய  எண்ணம்            குவியலாகத்   திணித்துள்ள   குப்பை   காண்பீர்பனிப்பொழிவால்   மறைந்துள்ள   காட்சி  போன்று            படர்ந்துள்ள   எண்ணங்கள்   மறைந்தி  ருக்கும் !தன்மையுடன்   பேசுங்கள்  கொஞ்ச  நேரம்            தனியாகப்  பேசுங்கள்   எரிப்பீர்   கொட்டி !அன்பான   அன்னையவள்   கைகள்  போன்று            அரவணைத்த   இயற்கையினை   எண்ணிப்  பார்ப்பீர்தன்னலத்தால்   வனப்புமிகு   மலைய   ழீத்தீர்            தண்மழையை  வரவழைக்கும்  காட  ழித்தீர்புன்மதியால்   அறிவியலைப்  பெரிதாய்  எண்ணிப்            புலம்புகின்றீர்  எல்லாம்மும்  அழிய  விட்டு !நன்றிதுவா   தனிமையிலே  நினைத்துப்  பார்ப்பீர்            நனியியற்கை  போல்மனத்தைக்  காத்தால்   வாழ்வீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com