"என் மகன்கள் என் மகள்கள்
நல் வாழ்வு காணவேண்டும் !"
அன்னை மனம் தனிமையிலும்
பேசும் மொழி இதுவாகும் !
"எந்த வித நிலைதனிலும்
நிதி நிலமை சீர்வேண்டும் !"
தந்தை மனம் தனிமையிலும்
வேண்டும் நிலை இதுவாகும் !
"வணிக மதில் பெருவகையாய்
பொருள் ஈட்டும் திறன்வேண்டும் !"
தனிமையிலும் வணிகர் மனம்
வேண்டும் வரம் இதுவாகும் !
தனிமையிலே பேசுவது என்றாலே
தன்னோடு தான்பேசும் நிலைதானே !
தனிமையிலே பேசும் போதும்
தன்னுடனே நீவேண்டும்
எனவேண்டும் எப்போதும்..
காதலரின் மனம் தானே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.