தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated On :2 ஜூன் 2018, 2:44 pm

அரசனாய்ப்பிறந்து
துறவியுடன் வளர்ந்தான்--
கலைகள் அறுபத்தி நான்கினையும்
கசக்கிப்பருகினான்.

கலைமகளுக்கே பொறாமை –
வில்லை, விஷ்ணுவின் வில்லை
முறித்தால் தான் உண்டு –
ஜனகனின் தேர்வில் முதலிடம்..
கைக்குள் விழுந்தாள்
பூமியின் மகள் –

சின்னத்தாயின்
எண்ணக்கசிவுகளைத்
துடைக்க
வனத்துறையின்
வரவேற்பை ஏற்றான் –

இவனின் இனியவள்
இலங்கை அரசனிற்கு
இலக்கா ?

இலகுவாய் விழுந்தான்
மானின் மாயையில்—
குரங்கு இல்லையென்றால்
குணாளன் இல்லை –
அனுமனின் அறிவால்

உயிருடன் ஒரு குடும்பம் –
சேது ,
நிஜக்கடலிற்கா,
கஷ்டக்கடலிற்கா,
தாண்டி தான் வீழ்த்தினான்
பத்து தலை பித்தனை –
மீட்டான்,  
மிதிலையின் மின்மினியை—
கடவுளின் வாழ்க்கைக்கயிறே
துன்பச்சிக்கலில் –
மனிதனிற்கு ?

நான் மட்டும் இந்த
வாழ்க்கை ப்போர்க்களத்தில்
கவலையின்றி — எப்படி ?
என் அறிவுக்கண்ணன்
எனக்காக தன்னம்பிக்கை கீதையை
தொடர்ந்து போதித்த வண்ணம் --

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.