வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated on
1 min read

அரசனாய்ப்பிறந்து
துறவியுடன் வளர்ந்தான்--
கலைகள் அறுபத்தி நான்கினையும்
கசக்கிப்பருகினான்.

கலைமகளுக்கே பொறாமை –
வில்லை, விஷ்ணுவின் வில்லை
முறித்தால் தான் உண்டு –
ஜனகனின் தேர்வில் முதலிடம்..
கைக்குள் விழுந்தாள்
பூமியின் மகள் –

சின்னத்தாயின்
எண்ணக்கசிவுகளைத்
துடைக்க
வனத்துறையின்
வரவேற்பை ஏற்றான் –

இவனின் இனியவள்
இலங்கை அரசனிற்கு
இலக்கா ?

இலகுவாய் விழுந்தான்
மானின் மாயையில்—
குரங்கு இல்லையென்றால்
குணாளன் இல்லை –
அனுமனின் அறிவால்

உயிருடன் ஒரு குடும்பம் –
சேது ,
நிஜக்கடலிற்கா,
கஷ்டக்கடலிற்கா,
தாண்டி தான் வீழ்த்தினான்
பத்து தலை பித்தனை –
மீட்டான்,  
மிதிலையின் மின்மினியை—
கடவுளின் வாழ்க்கைக்கயிறே
துன்பச்சிக்கலில் –
மனிதனிற்கு ?

நான் மட்டும் இந்த
வாழ்க்கை ப்போர்க்களத்தில்
கவலையின்றி — எப்படி ?
என் அறிவுக்கண்ணன்
எனக்காக தன்னம்பிக்கை கீதையை
தொடர்ந்து போதித்த வண்ணம் --

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com