யார் இட்ட சாபம்: கலைபரமேஷ்

Updated on
1 min read
ஈரம் பட்ட கையோடு என்னை முதல் முறை தொட்டாயேஅந்த தொடுதலில் சிலிர்த்து போனேன் நான் பிறந்த பொழுது.வேலை முடித்து மாலை வந்ததும் என் கன்னங்களை தொட்டாயேமுகம் சுளித்து மூக்கைப் பொத்தி ஓடினேன்….ஆசை ஆசையாய் எனக்கு பிடித்த பண்டத்தை வாங்கிவந்தாய் - அதைஉன் கையால் ஊட்டி விட உதறி தள்ளி கதவை சாத்தினேன் - என் பத்து வயதில்.முகம் சுளித்து மூக்கைப் பொத்தி ஓடிய என்னை என் மகன் –இன்றுஇந்த மனித மலம் அள்ளிய கையால் தொடும் பொழுதுச்சீ என்கிறான்.நான் பிறந்திருக்கையில் உணர்ந்த அதே சிலிர்ப்பை அனுபவிக்கிறேன்நாள் முழுக்க கழிவுகளை அள்ளிய அந்த ஈரத்தால் வந்த – ஜன்னியில்.வெளுத்து போன என் கையில் உண்ணும் ஒவ்வொரு முறையும்அள்ளிய மலங்களின் வாடையே என் வயிற்றுப் பசியை தீர்க்கிறது.அன்று உன் கைகளை தட்டி விட்டதை நினைத்து வரும்கண்ணீரிலே கழுவி கொள்கிறேன் – அந்த பாவத்தை…உன் மகளாக இந்த சமூகத்தில் பிறந்தது தான் தவறா …..யாரிட்ட சாபம் அப்பா இது இத்தனை மாறியும்இந்த வாடை நம்மை விடவில்லையே …நீ இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேனே இப்பொழுதாவதுஊட்டி விடுப்பா எனக்கு………

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com