யார் இட்ட சாபம்: கவிதா வாணி

Updated on
1 min read

என்னுயிரே... 

ஆகாய மார்கத்தில் அனுதினமும்
வரிவடிவம் ஆனாலும் அவை யாவும் 
அலை அலையாய் நிலை மாறும். 

கணம் தோறும் நீரலைகள் - கண் முன்னே மறைந்தோடும்,  
காட்டாற்று வெள்ளமென நினைவெல்லாம் கலைந்தோட 
கார்முகிலாய்  நான் இருந்தால்.. கனவெல்லாம் உலராதே. 

தண்ணீரும் தனலாக, மண் வாசம் மனமெங்கும் - 
கரை மீது நான் இருக்க, கப்பலிலே நீ போக, 
காயாத கறையாக ஆறாத என் மனதில்

கூறாத வார்த்தைகளால் கூராக்கி தினமென்னை  
செல்களிலே சேகரித்த அன்பூற்றி அடுப்பூத,
அரா - கிரியாய் எரிந்திடுமே -மையல் எனும் வேள்வித் தீ.

ஆதிக்க கரத்தாலே சாதிக்க நினைத்தவரை - சாதியும் சுட்டு விட
கட்டவிழ்த்த பழ வினைகள்,
 
உன் ஆதிக்கத்தை அழித்துவிட்டு... 
சாபமதை சுட்டறுத்து,
சாம்பலில் பீனிக்ஸாய்,

சோம்பலின்றி வந்து விடு,
ஆம்பலுனைக் காத்திடுவேன் - 
அல்லி மனம் நோகாது. என்றபடி நானுறங்க
ஆதவனும் எனை எழுப்ப - 
அலுவலகம் செல்ல வேண்டும் - 
அரை நாளும் விடுப்பில்லை.

நானறியேன் ஏன் என்று, 
யார் இட்ட சாபமிது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com