என்னுயிரே...
ஆகாய மார்கத்தில் அனுதினமும்
வரிவடிவம் ஆனாலும் அவை யாவும்
அலை அலையாய் நிலை மாறும்.
கணம் தோறும் நீரலைகள் - கண் முன்னே மறைந்தோடும்,
காட்டாற்று வெள்ளமென நினைவெல்லாம் கலைந்தோட
கார்முகிலாய் நான் இருந்தால்.. கனவெல்லாம் உலராதே.
தண்ணீரும் தனலாக, மண் வாசம் மனமெங்கும் -
கரை மீது நான் இருக்க, கப்பலிலே நீ போக,
காயாத கறையாக ஆறாத என் மனதில்
கூறாத வார்த்தைகளால் கூராக்கி தினமென்னை
செல்களிலே சேகரித்த அன்பூற்றி அடுப்பூத,
அரா - கிரியாய் எரிந்திடுமே -மையல் எனும் வேள்வித் தீ.
ஆதிக்க கரத்தாலே சாதிக்க நினைத்தவரை - சாதியும் சுட்டு விட
கட்டவிழ்த்த பழ வினைகள்,
உன் ஆதிக்கத்தை அழித்துவிட்டு...
சாபமதை சுட்டறுத்து,
சாம்பலில் பீனிக்ஸாய்,
சோம்பலின்றி வந்து விடு,
ஆம்பலுனைக் காத்திடுவேன் -
அல்லி மனம் நோகாது. என்றபடி நானுறங்க
ஆதவனும் எனை எழுப்ப -
அலுவலகம் செல்ல வேண்டும் -
அரை நாளும் விடுப்பில்லை.
நானறியேன் ஏன் என்று,
யார் இட்ட சாபமிது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.