17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 6

அமரர்களுக்கும் முனிவர்களுக்கும்

News image
Updated On :24 ஜூலை 2018, 12:00 am IST


பாடல் 6

கூத்தன், கோவலன், குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்,
வாய்த்த தண்பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே.

எம்பெருமான் கூத்தன், பசுக்களை மேய்த்த கோவலன், துன்புறுத்துகின்ற கொடிய அசுரர்களுக்கு எமன், போற்றுகின்ற நமக்கும் அமரர்களுக்கும் முனிவர்களுக்கும் இன்பமயமானவன், நெருங்கிய, குளிர்ந்த நீர்நிலங்கள், வளமான வயல்களால் சூழப்பட்ட திருமோகூரிலே எழுந்தருளியுள்ளவன், நம்பத்தக்கவன், அவனுடைய தாமரைத் திருவடிகளே நமக்குக் காப்பு, வேறெதுவும் காப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.