ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்
கீறின உடையினர் கெடில வாணரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கீறின = கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு = காளை மாடு: ஏழை = பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான்: அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர்; வேதங்களையும் வேதங்களின் ஆறு அங்கங்களையும் மற்றவர்களுக்கு விரித்து கூறியவர்: கங்கை ஆற்றினை தனது சடையில் நிறுத்தியவர்: கிழிந்த கோவண ஆடையினை உடையவர்: மேற்கண்ட தன்மைகளை உடைய பெருமான் தான் கெடில வாணராக திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

