மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 2

கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்.

Updated On :11 டிசம்பர் 2015, 8:04 am

ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு

கூறினர் கூறினர் வேதம் அங்கமும்

ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்

கீறின உடையினர் கெடில வாணரே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கீறின = கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு = காளை மாடு: ஏழை = பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான்: அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர்; வேதங்களையும் வேதங்களின் ஆறு அங்கங்களையும் மற்றவர்களுக்கு விரித்து கூறியவர்: கங்கை ஆற்றினை தனது சடையில் நிறுத்தியவர்: கிழிந்த கோவண ஆடையினை உடையவர்: மேற்கண்ட தன்மைகளை உடைய பெருமான் தான் கெடில வாணராக திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.