மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 9

நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல்

Updated On :12 டிசம்பர் 2015, 10:24 am

வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகமாகவும்
கிறிபட உழி தர்வர் கெடில வாணரே
 

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வெறியுறு = நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல் = ஆடுதல்: தந்திரமாக நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், இந்த பாடல் தாருகவனத்து மகளிர் காண ஆடிய நடனக் காட்சியோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை அவிழ்ந்து தரையில் புரளுமாறும், இடுப்பினில் புள்ளிகள் உடைய புலித்தோல் ஆடையாகவும், சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தனது உடலின் ஒரு பாகமாகவும் இருக்கும் கோலத்தில் கெடில வாணர் மாயக் கூத்து ஆடுகின்றார்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.