பாடல் 5
தேனப் போதுகள் மூன்றோடு ஓர் ஐந்துடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய் கெடிலக்கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வேனல் = இளவேனிற் காலம். எனவே, வேனலான் என்பதற்கு இளவேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் மன்மதன் எரிக்கப்பட்டான். அவனது தோல் உரிக்கப்படவில்லை. எனவே அவ்வாறு பொருள்கொள்வது பொருத்தமாகாது. வேனல் ஆனை = கோபம் உடைய யானை. போது = மலர். சில உரை ஆசிரியர்கள், உரித்த என்பதற்கு அழித்த என்று பொருள் கொண்டு, மன்மதனை எரித்த நிகழ்ச்சியை குறிப்பிடுவதாக கூறுகின்றனர்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">எட்டு வகையான தேன் பொருந்திய மலர்களை, பெருமானின் திருவடியில் இட்டு அவனை அர்ச்சித்து வணங்கித் தொழும் அடியார்களின் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். மீன்கள் பாயும் நீர்வளம் நிறைந்த கெடிலக் கரையில் உறைபவரும், மிகுந்த கோபத்துடன் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மத யானையை, அதன் தோலை உரித்துக் கொன்றவரும் ஆகிய வீரட்டத்து இறைவரை எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

