ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 9

தரித்து என்ற சொல் தாரித்து என்று, எதுகை கருதி விரிந்தது, தரித்து = மனதினில் கொண்டு.

Updated On :24 பிப்ரவரி 2016, 8:52 am

பாடல் 9

தாரித்து உள்ளி தடமலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய் கெடிலக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்த வீரட்டரே

</p><p align="JUSTIFY"><br /><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">தரித்து என்ற சொல் தாரித்து என்று, எதுகை கருதி விரிந்தது, தரித்து = மனதினில் கொண்டு. தடமலர் = பெரிய மலர்கள். பாரித்து = விரும்பி. உள்ளி = ஆழ் மனதினில் நினைத்து. வேரி = தேன் பொருந்திய. மூரி = பெரிய. பாற்றுவார் = கெடுப்பார். வேய்ந்த = கட்டிய.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தனது திருவுருவத்தை ஆழ் மனதினில் நினைத்து தியானித்து, நன்றாக அகன்று மலர்ந்த எட்டு வகையான மலர்களால் தன்னை அர்ச்சித்து தன்னை விருப்பமுடன் புகழும் அடியார்களின் வினைகளை, சிவபெருமான் முற்றிலும் கெடுத்து நீக்கிவிடுவார். எனவே மிகுந்த அகலத்துடன் தெளிந்த நீரினைக் கொண்டு பாய்ந்துவரும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ளவனும், தேன் நிறைந்த மலர்களைத் தனது செஞ்சடையில் சூடியுள்ளவனும் ஆகிய வீரட்டத்துப் பெருமானை, எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.