பாடல் 2:
வண்டணை கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவும்
கொண்டு அணைந்தேறு முடி உடையான்
குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை
உறைவார் சடை மேல்
வெண்டலை மாலை அன்றோ எம் பிரானுக்கு
அழகியதே
விளக்கம்:
தொண்டு=தொண்டர்கள், அடியார்கள்: குரைசேர் கழல்=சிலம்புகள் அணிந்ததால் ஒலி எழுப்பும் பாதங்கள்.
பொழிப்புரை:
புதுமலர்களாக காணப்படுவதால் வண்டுகள் தங்கும் தன்மை படைத்த கொன்றை மாலையினையும், வன்னி, ஊமத்தை மலர்களோடு, ஒளி வீசும் பாம்பினையும் தனது சடையில் அணிந்து காணப்படுபவர் சிவபெருமான் ஆவார். சிலம்புகள் ஒலியெழுப்பும் அவரது திருவடிகளை அடியவர்கள் வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றார். அவரது நீண்டு அழகாக காணப்படும் சடையில் உள்ள வெண்தலை மாலை சிவபெருமானுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

சேதமடைந்த அரசு நினைவுத் தூணை புதுப்பொலிவுற செய்ய கோரிக்கை

கான்சிட்டி பாடல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


