பாடல் 4:
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால்விடை
ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் இடம் ஆடுவர் பின்னு சடை
இடையே
சேர்ந்த கைம் மாமலர் துன்னிய சோற்றுத்துறை
உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம் பிரானுக்கு அழகியதே
விளக்கம்:
மால்விடை=பெருமை வாய்ந்த இடபம்: வாளரவம்=மினுக்கும் ஒளியை உடைய கொடிய அரவம்: ஆய்ந்த=ஆராய்ந்த: பேர்ந்த கை=வீசி நடமாடும் கை: கைம்மலர்=அடியார்கள் பூசையின் பொது தங்கள் கைகளால் தூவிய மலர்கள்:
பொழிப்புரை:
கையில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த, மினுக்கும் கோடுகளை உடையதும் கொடியதும் ஆகிய பாம்பினை ஏந்திக் கொண்டு, பெருமைக்குரிய இடபத்தின் மீது ஏறி எங்கும் செல்பவர் சிவபெருமான். அவர் கைகளை வீசிக்கொண்டு நடமாடுகையில், மற்றொரு கையில் மான் கன்றினையும் ஏந்தி காணப்படுகின்றார். அடியார்கள் வழிபாட்டின் போது தங்கள் கைகளால் தூவிய மலர்கள் சிவபெருமானது சடையில் நிறைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சோற்றுத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானது கைகளில் சூலம் மற்றும் மழு மிகுந்த அழகுடன் காணப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

சேதமடைந்த அரசு நினைவுத் தூணை புதுப்பொலிவுற செய்ய கோரிக்கை

கான்சிட்டி பாடல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


