ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 7

அழகாக காணப்படுகின்றாள்

News image
Updated On :17 டிசம்பர் 2017, 6:30 pm


பாடல் 7:

ஆயம் உடையது நாம் அறியோம்
                                                          அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும்
                                                          துயக்கு அறுத்தான்
தூய வெண்ணீற்றினன் சோற்றுத்துறை
                                                          உறைவார் சடை மேல்  
பாயும் வெண்ணீர்த் திரைக் கங்கை எம்மானுக்கு
                                                          அழகியதே


விளக்கம்:


துயக்கு=சோர்வு, தளர்ச்சி: ஆயம்=கூட்டம், இங்கே சேனை: அரணம்=கோட்டை, மூன்று கோட்டைகளைக் கொண்ட திரிபுரத்தவர்கள்: கணை வாங்குதல்=வில்லினை வளைத்தல்:

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற நாளில், சிவபெருமான் தன்னுடன் சேனைகளை அழைத்துச் சென்றாரா, இல்லையா என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். சிவபெருமான் வில்லினை வளைத்து, அதனில் அம்பினைப் பூட்டி, அம்பு எய்தி திரிபுரத்தவர்களை அழித்து, அவர்களால் தேவர்களுக்கு ஏற்பட்டிருந்த சோர்வினை நீக்கி, கோட்டைகள் எரிந்த பின்னர் அந்த சாம்பலைத் தனது மேனியில் பூசிக் கொண்டார். பாய்ந்து வந்த கங்கை நதி, அவனது நீண்ட சடைமுடியில் தங்கி மிகவும் அழகாக காணப்படுகின்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.