மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 8

துன்பங்கள் தொடரும்

News image
Updated On :18 நவம்பர் 2017, 4:52 am

பாடல் 8: 

    தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
    அடரும் போது அரனாய் அருள் செய்பவர்
    கடலின் நஞ்சணி கண்டவர் கடி புனல்
    படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே

விளக்கம்:

அரன்=அழித்தல் தொழிலைச் செய்பவன்: 
 
பொழிப்புரை:

தம்மைத் தொடர்ந்து வணங்கும் அடியார்களைத் துன்பங்கள் தொடரும் போது, அந்த துன்பங்களை அழிக்கும் அரனாக செயல்படுபவர் சிவபெருமான். ஆலகால விடம் துன்பமாக தேவர்களைத் தொடர்ந்த போது, அந்த நஞ்சினைத் தான் உட்கொண்டு, தேவர்களை அந்த துன்பத்திலிருந்து காத்து அருள் புரிந்தவர் சிவபெருமான் ஆவார். அவர் நறுமணம் கமழும் கங்கை நீரினைத் தனது செஞ்சடையில் அடக்கியுள்ளார். அவர் தாம் பாலைத்துறையில் உறையும் பெருமானாவார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.