பாடல் 11:
உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே
விளக்கம்:
உரம்=வலிமை: நெருக்கினான்=அச்சமுறச் செய்தவன்:
பொழிப்புரை:
தனது வலிமையினால் கயிலை மலையை அசைத்து, உமையம்மை அச்சம் கொள்ளுமாறு செய்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் அடர்த்து அவனது தலைகளையும் தோள்களையும் நெரித்தவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் இசைத்து பெருமானை வணங்க, அரக்கன் பால் இரக்கம் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். பாலைத்துறையில் உறையும், அவரைத் தமது கரங்களால் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


