மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

77. அட்டுமின் இல்பலி - பாடல் 5

ஆடலும் பாடலும்

News image
Updated On :23 அக்டோபர் 2017, 6:30 pm

பாடல் 5:
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள்
                                                                                             தொழ
நண்ணிலயத்தோடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொண்டு நின்றான் திரிபுரம் மூன்று
                                                                                             எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும் உள கழல் சேவடியே

விளக்கம்:

நிலையம்=திருக்கோயில்; ஆடலும் பாடலும் பிரியாத நல்லோர் என்று சொல்வதன் மூலம், மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடும் பாங்கு இங்கே உரைக்கப்படுகின்றது. 

பொழிப்புரை:

தலையில் வெண்பிறை சூடி உலகத்தவர்கள் காண நிற்பவனும், விண்ணோர்கள் தொழுமாறு கூத்து புரிபவனும், இலயத்தோடு இணைந்த ஆடலும் பாடலும் பிரியாத நல்லூர் தலத்தில் உள்ள சிறப்பான திருக்கோயில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், திரிபுரம் மூன்றையும் எரித்தவன். வீரக்கழல்கள் அணிந்த அவனது திருப்பாதங்கள் எனது கண்களிலும் நெஞ்சினிலும் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.