பாடல் 10:
திருவமர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கோ நெய்தல்
குருவமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர்
உருவமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே
விளக்கம்:
குருவமர்=நிறங்கள் பொருந்திய: மருவமர்=சூழப்பட்ட:
பொழிப்புரை:
திருமகள் அமரும் தாமரை மலர், சீராக வளரும் செங்கழுநீர் மலர், தலையான நெய்தல் பூ, நிறங்களுடன் காணப்படும் கோங்கம், குரா மலர், காண்போரை மகிழ வைக்கும் சண்பக மலர், கொன்றை மலர், வன்னி மலர், ஆகிய மலர்கள் கொண்ட செடிகளும் கொடிகளும் நெருங்கி வளரும் நல்லூர் தலத்தில் மறையோர்கள் வாழும் மாட மாளிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு அழகாக காணப்படும் நல்லூரில் உறைபவனும், உருவத்தில் அழகுடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய சிவபிரானை நாம் நமது மனதினில் நினைத்து தியானம் செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


