மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

77. அட்டுமின் இல்பலி - பாடல் 10

மனதினில் நினைத்து

News image
Updated On :28 அக்டோபர் 2017, 6:30 pm

பாடல் 10:

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கோ நெய்தல்
குருவமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர் 
உருவமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே

விளக்கம்:

குருவமர்=நிறங்கள் பொருந்திய: மருவமர்=சூழப்பட்ட:

பொழிப்புரை:

திருமகள் அமரும் தாமரை மலர், சீராக வளரும் செங்கழுநீர் மலர், தலையான நெய்தல் பூ, நிறங்களுடன் காணப்படும் கோங்கம், குரா மலர், காண்போரை மகிழ வைக்கும் சண்பக மலர், கொன்றை மலர், வன்னி மலர், ஆகிய மலர்கள் கொண்ட செடிகளும் கொடிகளும் நெருங்கி வளரும் நல்லூர் தலத்தில் மறையோர்கள் வாழும் மாட மாளிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு அழகாக காணப்படும் நல்லூரில் உறைபவனும், உருவத்தில் அழகுடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய  சிவபிரானை நாம் நமது மனதினில் நினைத்து தியானம் செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.