ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

135. மன்னியூர் இறை  - பாடல் 7

திருமுறைப் பாடல்கள்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2019, 6:30 pm

பாடல் 7:

    அந்தணாளர் தம்
    தந்தை அன்னியூர்
    எந்தையே என
    பந்தம் நீங்குமே

விளக்கம்:

பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு; சடையான் என்றும் வேதியன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. அந்தணர்களில் சிறந்தவன் என்றும் முனிவர்களில் சிறந்தவன் என்றும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அந்தணர்களுக்கு தலைவனாகவும் அந்தணர்களில் சிறந்தவனாகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான். அந்த இறைவனை எங்களது தந்தையே என்று புகழ்ந்து போற்றுவோர், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தினை நீக்கும் வல்லமை உடையவர்களாக விளங்குவார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.