ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

124. வரமதே கொளா - பாடல்  5

சிவஞானம்

News image
Updated On :21 மார்ச் 2019, 6:30 pm


பாடல் 5:

    காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல்                     செய்யும் நல்
    தோணி வண்புரத்து ஆணி என்பவர் தூமதியினரே

விளக்கம்:

காணி=நிலம்; ஒண்பொருள்=சிறந்த வழியில் ஈட்டிய செல்வம்; வண்புரம்=வளமை மிகுந்த நகரம்; தூமதி=தூய்மையான சிவஞானம். தோணிபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ணி. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.  

பொழிப்புரை: 

நிலங்களையும் சிறந்த வழியில் ஈட்டிய பொருட்களையும் கற்றவர்களுக்கு கொடையாக கொடுத்து உதவும் நல்ல மனம் உடைய மனிதர்கள் விரும்பி வாழ்கின்றதும், அடியார்களுக்கு பல வகையிலும் நன்மை புரிவதும் ஆகிய வளமை மிகுந்த தோணிபுரத்தில் வீற்றிருப்பவன் சிவபெருமான்; அந்த பெருமானை மாற்றுரைக்கும் ஆணிப் பொன் போன்று உயர்ந்த அரிய பொருள் என்று சொல்லித் தொழும் அடியார்கள் தூய்மையான சிவஞானம் உடையவர்கள் அவார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.